முகம் சுளிக்காதீர்.. சுத்தமானது.. கழிவு நீரில் இருந்து தயாரிக்கப்பட்ட பீர் !!
முகம் சுளிக்காதீர்.. சுத்தமானது.. கழிவு நீரில் இருந்து தயாரிக்கப்பட்ட பீர் !!

அடிக்கும் வெயில்க்கு கூலீங்கா ஒரு பீர் குடித்தால் தான் சரியாக இருக்கும் என்ற பேச்சு எப்போதும் நண்பர்கள் மத்தியில் எழும். அதுமட்டுமுல்லாமல் பார்ட்டி என்றாலும் நான்கு நண்பர்கள் கூடினாலும் பீர் குடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். இப்படி உலகம் முழுவதும் பீர் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த நிலையில், கழிவுநீரில் இருந்து மறுசுழற்சி செய்யப்படும் நீரில் இருந்து பீர் தயாரிக்கப்பட்டு, 'நியூப்ரூ' என்ற பெயரில் சிங்கப்பூரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதலில் கழிவு நீர் குடிநீர் விநியோக சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பம்ப் செய்யப்பட்டு அதன்பின், வடிகட்டப்பட்ட சுத்தமான நீராக மாற்றப்படுகிறது. இவ்வாறு மறுசுழற்சி செய்யப்படும் குடிநீரின் பிராண்ட் நியூவாட்டர் (NEWater) எனப்படுகிறது.
அதன்பின்னர் இந்த குடிநீரை பீர் தயாரிப்புக்கு பயன்படுத்துகின்றனர். சிங்கப்பூரில் தேசிய நீர் நிறுவனத்துடன் இணைந்து உள்ளூர் மதுபான நிறுவனமான ப்ரூவர்க்ஸ் இந்த சிறப்பு பீரை அறிமுகப்படுத்தியுள்ளது. கழிவு நீரில் இருந்து தயாரிக்கப்பட்டதா என்ற சலசலப்பு எழுந்துள்ளது. எனினும், சிங்கப்பூர் முழுவதும் தற்போது இந்த சிறப்பு பீர் பற்றிய பேச்சுதான் அடிபடுகிறது. அதேநேரத்தில் இந்த பீர் மிகவும் சுவையாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த பீருக்கு தற்போது மதுபிரியர்கள் மத்தியில் எதிர்பார்த்ததை விட, அதிகளவில் வரவேற்பு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. இது மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் முயற்சியாகும். நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரிக்கத் தொடங்கியதால், கழிவுநீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றும் நீர் மறுசுழற்சி தொழில்நுட்பத்தை அரசு செயல்படுத்த தொடங்கி உள்ளது.
முதலில் கழிவு நீர் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, புற ஊதாக் கதிர்களால் சுத்திகரிக்கப்படுகிறது. மேலும் அது குடிநீராக மாறுவதற்கு முன்பு பல்வேறு சுத்திகரிப்பு நிலைகளில் அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு, அதன்பிறகே பயன்பாட்டிற்கு வருகிறது. அந்த வகையில் பீர் தயாரிக்கப்படுவதாக மக்களுக்கு அந்நிறுவனம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
newstm.in