ஜீன்ஸ் பேண்ட் போடக்கூடாதா? - திருமணமான 4 மாதத்தில் கணவன் குத்திக்கொலை !!

ஜீன்ஸ் பேண்ட் போடக்கூடாதா? - திருமணமான 4 மாதத்தில் கணவன் குத்திக்கொலை !!

ஜீன்ஸ் பேண்ட் போடக்கூடாதா? - திருமணமான 4 மாதத்தில் கணவன் குத்திக்கொலை !!
X

திருமணத்திற்கு பின்னர் மனைவியை ஜீன்ஸ் பேண்ட் அணிய கூடாது என கட்டுப்பாடு விதித்த கணவனை மனைவி கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தோர்பிதா என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், அதேபகுதியைச் சேர்ந்த புஷ்பா ஹெம்ப்ராம் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. புதுமண தம்பதிகளான இருவரும் சந்தோஷமாகவே இல்லற வாழ்க்கையை நகர்த்தினர்.

arrested

இந்நிலையில் புஷ்பா கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்பகுதியில் நடைபெற்ற கண்காட்சிக்கு சென்றார். இது தான் அவர்களுக்கு தகராறை உண்டாக்கியது. அதாவது, கோபால்பூர் கிராமத்தில் நடந்த கண்காட்சி புஷ்பா ஜீன்ஸ் பேண்ட் அணிந்து சென்றார். அப்போது அவரைத்தடுத்த கணவர் திருமணம் ஆனதற்கு முன்பு ஜீன்ஸ் அணிந்தது சரி, இனி ஜீன்ஸ் அணிய வேண்டாம் என கூறியுள்ளார்.

arrested

ஆனால், இதற்கு புஷ்பா எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கண்காட்சிக்கு சென்றுவந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம்முற்றி கைகலப்பாக மாறியது, அப்போது சமையற்கட்டில் இருந்த கத்தியை எடுத்து, கணவனை புஷ்பா சரமாரியாக குத்தினார். அதில் கணவர் ரத்த வெல்லத்தில் சரிந்தார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் அவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து புஷ்பாவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it