காய் நகர்த்தும் சசிகலா - அதிர்ச்சியில் ஈபிஎஸ் ஓபிஎஸ்..!!
காய் நகர்த்தும் சசிகலா - அதிர்ச்சியில் ஈபிஎஸ் ஓபிஎஸ்..!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு சசிகலா, தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதன் நகலை தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஓபிஎஸிடம் வழங்கினர்.
அதேபோல் ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது தான் கட்சித் தொண்டர்களின் விருப்பம் என்று கூறி வருகிறார். இதுவரை இந்த விவகாரத்தில் பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் புதிய தீர்மானத்தின் மீது எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செல்வதற்காக இல்லத்திலிருந்து சசிகலா புறப்பட்டார். நெல்லை ,தென்காசி, திருச்செந்தூர் பகுதிகளில் தனது ஆதரவு அளிக்கும் அதிமுக நிர்வாகிகளை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து விமான நிலையத்தில் சசிகலா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,
தொடர் தோல்விகளை சந்தித்ததால் அதிமுகவினர் துயரத்தில் உள்ளனர். அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒரே குடும்பம் போன்றவர்கள். குடும்பத்தில் உள்ள பிள்ளைகளை பார்க்கச்செல்கிறேன். தொண்டர்கள் என்னை நிச்சயம் சந்திப்பார்கள் என்றார்.