அதிமுக ஆர்பாட்டத்தில் பரபரப்பு.. எடப்பாடி பழனிசாமிக்கு திடீர் மயக்கம்..!
அதிமுக ஆர்பாட்டத்தில் பரபரப்பு.. எடப்பாடி பழனிசாமிக்கு திடீர் மயக்கம்..!

சென்னையில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி திடீரென மயக்கம் அடைந்தார். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் மின் கட்டணம், விலைவாசி, சொத்து வரி உயர்வு மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை போன்றவைகளைக் கண்டித்து சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்து, திமுக அரசுக்கு எதிராகவும், மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சுமார் அரை மணி நேரம் உரையாற்றினார்.
அதன் பின்னர், மேடையில் நின்று கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கட்சி நிர்வாகிகள் தண்ணீர் கொடுத்து மேடையில் உள்ள இருக்கையில் அமர வைத்தனர். சிறிது நேரத்திற்கு பின்னர் அவர் சகஜ நிலைக்கு திரும்பினார்.
இதையடுத்து, ஆர்ப்பாட்டம் நிறைவடைந்ததையடுத்து எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். கடுமையான வெயில் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கு லேசான தலை சுற்றலுடன் மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.