இறந்தாலும் என் மகன் மற்றவர்கள் வாழ்க்கையில் வாழ்வான்.. உருகவைக்கும் தாயின் சோகம் !!
இறந்தாலும் என் மகன் மற்றவர்கள் வாழ்க்கையில் வாழ்வான்.. உருகவைக்கும் தாயின் சோகம் !!

சேலம் அல்லிக்குட்டை பகுதியை சேர்ந்த கமலநாதன், நவமணி தம்பதியர்களின் மகன் நிவாஸ் (25). மெக்கானிக்கல் இன்ஜினியரான இவர், ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 15 ஆம் தேதி அம்மாபேட்டை மணல் மார்க்கெட் பகுதி அருகே தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், படுகாயமடைந்த நிவாஸ், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்தார். ஆனால், உடல்நிலையில் முன்னேற்றமும் ஏற்படாததால், பரிசோதனை அடிப்படையில் இளைஞர் நிவாஸ் மூளைச்சாவடைந்ததாக மருத்துவர்கள் உறுதிசெய்தனர். மேலும் இந்த தகவலை அவரது தாய் நவமணி மற்றும் அவரது சகோதரர் நரேஷ் ஆகியரிடம் தெரிவித்தனர்.
இதனால் தாய் மற்றும் சகோதரர் அதிர்ச்சி அதிர்ச்சியடைந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு கணவர் கமலநாதன் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பாக தான் உயிரிழந்த நிலையில் மகன் விபத்தில் உயிரிழந்ததை தாங்க முடியாமல் நவமணி கதறி அழுதார். இந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.
இதையடுத்து நவமணி மற்றும் அவரது உறவினரிடம் அரசு மருத்துவமனை அதிகாரிகள் சந்தித்து அவரிடம் உடல் உறுப்புகளை தானம் செய்யுமாறு தெரிவித்தனர். எங்களுடைய மகன் இல்லை என்றாலும் சிலரின் வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ்வான் என்று தாய் கூறினார். இதற்கு தாய் மற்றும் உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனையில் உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டது. இருதயம், இரண்டு வால்வுகள், சிறுநீரகம், தோல் ஆகியவற்றை எடுத்து பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் தாயிடம் மகனின் உடல் ஒப்படைக்கப்பட்டது. என் மகன் இறந்துவிட்டாலும் அவனுடைய உடல் உறுப்புகள் மூலம் மற்றவர்கள் வாழ்க்கையில் வாழ்வான் என்று அவதது தாய் தெரிவித்தார்
newstm.in