ரசிகர்கள் உற்சாகம்.. ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் இந்தியா

ரசிகர்கள் உற்சாகம்.. ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் இந்தியா

ரசிகர்கள் உற்சாகம்.. ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் இந்தியா
X

அடுத்து நடைபெற உள்ள ஐ.சி.சி.உலக கோப்பை தொடர்களுக்கான இறுதிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது,

dg

அதன்படி 2025 ஆண்டுக்கான பெண்கள் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா, ஆகியோர் வரவேற்றுள்ளனர். 2025 ஐசிசி பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

gf

இந்தியாவில் பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு எங்களிடம் அனைத்து உள்கட்டமைப்பும் உள்ளது என்றும், இந்த போட்டிகளை வெற்றிகரமாக நாங்கள் நடத்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it