மகள் கண்முன்னே கள்ளக்காதலியுடன் நிர்வாணமாக தந்தை உல்லாசம்.. விசாரணையில் பகீர் பின்னணி !!
மகள் கண்முன்னே கள்ளக்காதலியுடன் நிர்வாணமாக தந்தை உல்லாசம்.. விசாரணையில் பகீர் பின்னணி !!

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர் குமரன் (37). மெக்கானிக் வேலை செய்து வரும் இவர், திருட்டு, கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்பான புகார்களில் இவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் 14க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவரது மனைவி கடந்த ஆண்டு உடல்நல பாதிப்பால் இறந்துவிட, 6 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து அவரது 6 வயது மகள் வாலாஜா அடுத்த மேல குப்பத்தில் உள்ள அவரது தாத்தா பாதுகாப்பில் இருந்தார். குமரனும் அங்கேயே தங்கியிருந்தார். அப்போது குமரனின் நடவடிக்கை சரியில்லாததால் அவரது மாமனாருடன் தகராறு ஏற்பட்டது. குமரன் அவரது மகளை அழைத்துக்கொண்டு காட்பாடியில் குடியேறினார். அங்கு வைத்து மகள் என்றும் கூட பாராமல் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். மேலும் பக்கத்து வீட்டிலும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பழைய காட்பாடி ரோட்டில் உள்ள ஒரு வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்தார். அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. அந்த பெண்ணை அடிக்கடி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது சிறுமி முன்பாகவே அவர் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். மேலும் மகளிடமும் அத்துமீறுல் தொடர்ந்தது.
சிறுமி வீட்டைவிட்டு வெளியேற முயற்சித்தால், இதுபற்றி வெளியில் சொல்லக்கூடாது எனக் கூறி தாக்கி உள்ளார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு குமரனின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது. குமரன் வீட்டில் இல்லாதப்போது, அவரது மகளை தனியாக அழைத்து பக்கத்து வீட்டு பெண் விசாரித்தார்.

அப்போது சிறுமி எனது தந்தை வீட்டுக்கு பெண் ஒருவரை அழைத்து வருவார். இருவரும் துணி இல்லாமல் ஒன்றாக இருப்பார்கள். தந்தை என்னிடமும் தவறாக நடந்து கொள்வார். இதுபற்றி வெளியே சொன்னால் என்னை அடிப்பார் என கூறி அழுதுள்ளார். பின்னர் அப்பெண் அளித்த தகவலின்பேரில், இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.
பின்னர் குமரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரை வேலூர் ஜெயிலில் அடைத்தனர். 6 வயது சிறுமியை தாத்தா வீட்டில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
newstm.in

