சிறையில் பரவிய தீ.. 51 கைதிகள் தீயில் கருகி உயிரிழப்பு !!

சிறையில் பரவிய தீ.. 51 கைதிகள் தீயில் கருகி உயிரிழப்பு !!

சிறையில் பரவிய தீ.. 51 கைதிகள் தீயில் கருகி உயிரிழப்பு !!
X

சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 51 கைதிகள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள துலுவா நகரில் பெரிய சிறைச்சாலை ஒன்று உள்ளது. இதில் 180 அறைகளில் 1,267 கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் இந்த சிறைச்சாலையில் எதிர்பாராதவிதமாக திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், 49 கைதிகள் தீயில் கருகி மரணம் அடைந்தனர்.

fire

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்த கைதிகளின் உறவினர்கள் சிறை வளாகத்தில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற மக்கள் திடீரென ஒன்றுகூடி சிறையை அடித்து உடைத்து சூறையாடினர்.

போலீசாரையும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளையும் பெற்றோர்கள் தாக்கினர். பின்னர் அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

fire

இதனிடையே, சிறைச்சாலையில் சிலர் தீவைத்ததாக பரபரப்பு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, துலுவா நகரில் உள்ள இந்த சிறையில் உள்ள கைதிகள் நேற்று முன்தினம் திடீர் கலவரத்தில் ஈடுபட்டனர். கலவரத்தில் ஈடுபட்ட போது, சிறைக்கு தீப்பிடித்தது.

மளமளவென பல்வேறு அறைகளுக்கு பரவிய தீ, சில நேரத்தில் சிறை முழுவதும் பரவியது. இதில் 180 அறைகளில் அடைக்கப்பட்டு இருந்த 1267 பேரில் 51 கைதிகள் மரணம் அடைந்தனர். மேலும் பலர் பலத்த தீக்காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it