மீனவர்கள் படும் துயரம்.. மத்திய அரசு உதவ முதலமைச்சர் கடிதம் !

மீனவர்கள் படும் துயரம்.. மத்திய அரசு உதவ முதலமைச்சர் கடிதம் !

மீனவர்கள் படும் துயரம்.. மத்திய அரசு உதவ முதலமைச்சர் கடிதம் !
X

தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், கூறியிருப்பதாவது, கடந்த ஜூலை 20- ஆம் தேதி அன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 6 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (25/07/2022) கடிதம் எழுதியுள்ளர்.

தற்போது தமிழகத்தைச் சேர்ந்த 92 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளது. அவற்றில் சில படகுகள் 2018- ஆம் ஆண்டில் சிறைப்பிடிக்கப்பட்டதால், அவை முற்றிலும் சேதம் அடையக்கூடும். படகின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, அவர்களது படகிற்கான உரிமையைக் கோர வேண்டுமென்ற நிபந்தனை பேரில், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். தற்போது இலங்கையில் நிலவும் சூழ்நிலை காரணமாக அவர்களால் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

fisherman

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இந்திய அரசின் உயர்மட்ட அளவில் உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை கோருவதாகவும், இலங்கையில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மீன்பிடிப் படகின் உரிமையாளர்கள், இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க தாம் வலியுறுத்துவதாகவும், முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இக்கடிதத்தில், கடந்த சில மாதங்களில் கைது செய்யப்பட்ட 18 மீனவர்களை சொந்த நாட்டுக்கு அழைத்து வர உதவியதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


newstm.in

Next Story
Share it