மக்களே.. வண்டலூர், கிண்டி பூங்காக்களுக்கு இன்று செல்லவேண்டாம் !!

மக்களே.. வண்டலூர், கிண்டி பூங்காக்களுக்கு இன்று செல்லவேண்டாம் !!

மக்களே.. வண்டலூர், கிண்டி பூங்காக்களுக்கு இன்று செல்லவேண்டாம் !!
X

44ஆவது சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் இன்று முதல் நடைபெறவுள்ளது. இந்த போட்டியை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் தொடக்க விழாவின் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை தொடங்கி வைக்கிறார். இதனால் சென்னையில் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னையே விழாக்கோலம் பூண்டுள்ளது என்றே கூறலாம். செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்பு உள்ளனர்.

fg

இதையொட்டி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்கா மற்றும் கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா வியாழக்கிழமை செயல்படாது என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. அதற்குப் பதிலாக ஆகஸ்ட் 2ஆம் தேதி பூங்காக்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செஸ் போட்டியை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் அதில் சிக்காமல் இருக்கவும் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

newstm.in

Next Story
Share it