இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானிலும்.. வெடித்தது மக்கள் போராட்டம்

இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானிலும்.. வெடித்தது மக்கள் போராட்டம்

இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானிலும்.. வெடித்தது மக்கள் போராட்டம்
X

இலங்கையில் பொருளாதார சீர்குலைவு, அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு போன்றவற்றால் இலங்கை அரசு திவாலாகி இருக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத அளவு விலை உயர்ந்துள்ளது.

இதனால் இலங்கை அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். தற்போது இந்த நிலை இந்தியாவின் மற்றொரு அண்டைநாடான பாகிஸ்தானுக்கும் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அங்கு பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

cxv

அதன்படி பாகிஸ்தானில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.209.86 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.204.15 ஆகவும் உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லாகூர், கராச்சி, இஸ்லாமாபாத் உள்ளிட்ட இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பொதுமக்கள் முழக்கங்களை எழுப்பினர். இதைபோல், பாகிஸ்தான் அரசு ஊழியர்கள், தங்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை உயர்த்த வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

newstm.in

Tags:
Next Story
Share it