Theme Check

காதலி தான் முக்கியம்.. கடல் தாண்டி சென்ற தமிழ் பெண் !!

காதலி தான் முக்கியம்.. கடல் தாண்டி சென்ற தமிழ் பெண் !!

காதலி தான் முக்கியம்.. கடல் தாண்டி சென்ற தமிழ் பெண் !!
X

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தன்பாலின ஈர்ப்பாளர்களின் மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜூன் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமை அவர்கள் பேரணியாக சென்று தங்களது உரிமைகளுக்கு குரல் கொடுத்து, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவர். இந்நிலையில், தன்பாலின ஈர்பாளர்களான பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஒருவருக்கும், இலங்கையை சேர்ந்த 33 வயதான பெண் ஒருவருக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த பெண்ணுக்கு குழந்தை ஒன்றும் இருக்கும் நிலையில், நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. நேரில் சந்திக்க முடியவில்லை என்றாலும் அவர்கள் செல்போன் மூலம் காதலை வலுப்படுத்தினர்.

airport

இந்த நிலையில், இலங்கையை சேர்ந்த பெண்ணை தமிழகம் வருமாறு தமிழகத்தை சேர்ந்த பெண் அழைத்துள்ளார். ஆனால், இலங்கையில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளால் பாஸ்போர்ட் கிடைப்பதில் தாமதமாகியுள்ளது. இதனால், தமிழகத்தை சேர்ந்த பெண் தனது காதலியை தேடி இலங்கைக்கு சென்றுள்ளார். சுற்றுலா விசாவில் இலங்கை சென்ற அவர், தனது இலங்கை காதலியுடன் அவரது அக்கறைபற்று வீட்டில் கடந்த 20ஆம் தேதி இரவு தங்கியுள்ளார்.

பெண்கள் இருவருக்கும் இடையேயான தொடர்பை கண்ட இலங்கை பெண்ணின் தந்தை, அக்கரைப்பற்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் இரண்டு பெண்களையும் கைது செய்து, அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற விசாரணையின் போது, தன்னை தனது காதலியுடன் இந்தியாவுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும், இல்லையெனில் இவரும் தற்கொலை செய்துக்கொள்வோம் எனவும் இலங்கை பெண் தெரிவித்துள்ளார்.

airport

வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த இரு பெண்களையும் மனநல மருத்துவரிடம் அனுப்பி அதன் பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து, மனநல பரிசோதனைக்காக கல்முனை மருத்துவமனைக்கு பெண்கள் இருவரும் அனுப்பி வைக்கப்பட்டது.

newstm.in

Next Story
Share it