குட் நியூஸ்..!! 6 மாத குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி!!
குட் நியூஸ்..!! 6 மாத குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி!!

அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், 6 மாதம் மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மாடர்னா மற்றும் பைசர் தடுப்பூசி போட அந்நாட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளுது.
இதன்படி, அமெரிக்காவில் 5 வயதுக்கு உட்பட்ட ஏறக்குறைய 1.8 கோடி குழந்தைகள் தடுப்பூசி போட தகுதியானவர்கள் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகம் அனுமதி தந்துள்ளது. இதேபோன்று, பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் டீன்ஏஜ் வயதினருக்கு மாடர்னா தடுப்பூசியை செலுத்தவும் உணவு மற்றும் மருந்து கழகம் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கு முன்பு வரை இந்த வயதினருக்கு பைசர் தடுப்பூசிக்கு மட்டுமே அனுமதி இருந்தது. இந்த தடுப்பூசியை செலுத்தும் பணிகள் வருகிற 20-ந் தேதி அல்லது 21-ந் தேதி முதல் தொடங்கும் என கூறப்படுகிறது.
அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் ஒரு சில மாதங்கள் தடுப்பூசியை செலுத்தும் பணியை தொடர முடிவு செய்துள்ளது. இதற்காக லட்சக்கணக்கான டோஸ் தடுப்பூசிகளுக்கு, மாகாணங்கள், சமூக சுகாதார மையங்கள் மற்றும் மருந்து கடைகள் உள்ளிட்டவை முன்பே ஆர்டர் கொடுத்து விட்டன.