பயணிகளுக்கு குட் நியூஸ்..!! ரயில்களில் விற்கப்படும் டீ, காபி, உணவுக்கு சர்வீஸ் சார்ஜ் நீக்கம்: ஆனால்?
பயணிகளுக்கு குட் நியூஸ்..!! ரயில்களில் விற்கப்படும் டீ, காபி, உணவுக்கு சர்வீஸ் சார்ஜ் நீக்கம்: ஆனால்?

ஐஆர்சிடிசியின் முந்தைய விதிகளின்படி, ஒரு நபர் ரயில் டிக்கெட் முன்பதிவின் போது உணவும் முன்பதிவு செய்யப்படுகிறது. அப்படி தவறும் பட்சத்தில் அவர்களின் உணவு கட்டணத்துடன் ரூ.50 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.
ஆனால், ப்ரீமியம் ரயில்களான ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ஆகிய ரயில்களில் செல்லும் பயணி உணவுக்கு முன்கூட்டியே ஆர்டர் செய்யாத பயணிகளும், டீ காபிக்கு ரூ.20 செலுத்தினால் போதுமானது. முன்பு, முன்பதிவு செய்யப்படாத டீ, காபி ஆகியவற்றுக்கு சர்வீஸ் கட்டணம் சேர்த்து ரூ.70 செலுத்த வேண்டும்
முன்பு, காலைசிற்றுண்டி ரூ.105, மதிய உணவு ரூ.185, மாலை ஸ்நாக்ஸ் ரூ.90 வசூலி்க்கப்படும். ஆனால்,இப்போது, கூடுதலாகரூ.50 வசூலிக்கப்படுகிறது. இனிமேல், காலை உணவு ரூ.155, மதிய உணவு ரூ.235, ஸ்நாக்ஸ் ரூ.140 என உயர்ந்துள்ளது
இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, “சர்வீஸ் சார்ஜ் நீக்கம் என்பது, ப்ரீமியம் ரயில்களில் டீ, காபி விலையில் மட்டும்தான் எதிரொலிக்கும். முன்கூட்டியே புக் செய்யாதவரும், புக் செய்தவரும் டீ, காபிக்கு ஒரே விலை கொடுத்தால் போதும். ஆனால், மற்ற உணவுகளுக்கு முன்பதிவு செய்யாமல்இருந்தால் சர்வீஸ் கட்டணம் சேர்க்கப்படும்” எனத் தெரிவித்தார்