பயணிகளுக்கு குட் நியூஸ்.. 14ம் தேதி முதல் அனைத்து ரயில்களிலும்.. ரயில்வே அறிவிப்பு..!
பயணிகளுக்கு குட் நியூஸ்.. 14ம் தேதி முதல் அனைத்து ரயில்களிலும்.. ரயில்வே அறிவிப்பு..!

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த 2020-ம் ஆண்டு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. தொற்று பரவல் காரணமாக ரயில்களில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சமைக்கப்பட்ட உணவு விற்பனை நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே, கொரோனா தொற்று வெகுவாக குறைந்ததால், சிறப்பு ரயில்கள் வழக்கமான ரயில்களாக மாற்றப்பட்டன. அதோடு, முக்கிய ரயில்களில் மீண்டும் சமைக்கப்பட்ட உணவு விற்பனையும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது.

கடந்த மாதம் 80 சதவீத ரயில்களில் உணவு விற்பனை தொடங்கப்பட்டது. இந்நிலையில், நாடு முழுவதும் ஏற்கனவே இருந்தபடி அனைத்து ரயில்களிலும் சமைக்கப்பட்ட உணவுகள் விற்பனை வரும் 14-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.
Next Story

