Theme Check

#BREAKING:- மாணவர்களுக்கு குட் நியூஸ்.. அனைவரும் ஆல் பாஸ்..!

#BREAKING:- மாணவர்களுக்கு குட் நியூஸ்.. அனைவரும் ஆல் பாஸ்..!

#BREAKING:- மாணவர்களுக்கு குட் நியூஸ்.. அனைவரும் ஆல் பாஸ்..!
X

தமிழகத்தில், 9-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட வில்லை. நடந்து முடிந்த கல்வி ஆண்டில் சில மாதங்கள் நேரடி வகுப்புகள் நடைபெறாமல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நேரடி வகுப்புகள் தொடங்கியதால் மாணவர்களிடம் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை போக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு பொதுத் தேர்வுகள் நடைபெற்றது. தற்போது விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஒன்று முதல் 8-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் கட்டாயம் தேர்ச்சி அளிக்கப்படுவது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் 9-ம் வகுப்பில் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டிலும் 12-ம் வகுப்பை தவிர பிற வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டனர்.

இந்த ஆண்டு 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் உத்தரவு வெளியாகியுள்ளது. இந்த தகவல் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it