Theme Check

ஆளுநரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட முடியாது.. வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!

ஆளுநரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட முடியாது.. வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!

ஆளுநரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட முடியாது.. வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!
X

மேற்கு வங்க அரசுக்கும் மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக பனிப்போர் நீடித்து வருகிறது. இந்த மோதல் உச்ச கட்டத்தை எட்டிய நிலையில், சமீபத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி ஆளுநர் தன்கரை ட்விட்டரில் முடக்கினார்.

அதுபோல, நாடாளுமன்றத்தில் திரிணாமுல் எம்பி சுகேந்து சேகர் ரே, 170 விதியின் கீழ் ஒரு முக்கிய தீர்மானத்தை சமர்பித்தார். அதில், மாநில அரசின் நடவடிக்கைகளில் ஆளுநர் தலையிடுவதாக குற்றம் சாட்டி, ஆளுநராக இருந்து ஜக்தீப் தன்கரை நீக்குமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை வலியுறுத்தினார்.
In new TMC-governor row, Mamata's party wants Dhankhar booked for  'hampering corruption probe'
இதையடுத்து, பிப்ரவரி 12-ம் தேதி முதல் மேற்கு வங்க சட்டப்பேரவையை ஒத்திவைத்து ஆளுநர் ஜக்தீப் தன்கர் அதிரடியாக அறிவித்துள்ளார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆளுநரின் இந்த செயல் ‘அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல் என்று திரிணாமுல் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. மேலும், சட்டசபை கூட்டத்தொடர் இடைநிறுத்தப்பட்டால், மாநில அரசு தனது பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது, அது அரசின் செயல்பாட்டை பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆளுநர் ஜக்தீப் தன்கரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆளுநரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட முடியாது என்று கூறியதுடன், அரசியலமைப்பு சாசனம் 361-ன் படி மாநில ஆளுநர் அதிகாரம் படைத்தவராகிறார்.

எந்தவொரு நீதிமன்றமும், ஆளுநரை எதிர் மனுதாரராக சேர்த்து பதில் அளிக்க உத்தரவிட முடியாது என்று கூறிய நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Next Story
Share it