அரசு அதிரடி உத்தரவு.. 6 வயது நிரம்பியிருந்தால் மட்டுமே 1-ம் வகுப்பில் சேர்க்கை..!
அரசு அதிரடி உத்தரவு.. 6 வயது நிரம்பியிருந்தால் மட்டுமே 1-ம் வகுப்பில் சேர்க்கை..!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் 6 வயது நிரம்பி இருந்தால் மட்டுமே ஒன்றாம் வகுப்பில் சேர்க்கை பெற முடியும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் படி, பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன்படி, எல்கேஜி வகுப்பில் சேர 3 ஆண்டு 10 மாதங்கள் முதல் 4 ஆண்டு 10 மாதங்கள், ஒன்றாம் வகுப்பில் சேர 5 ஆண்டு 10 மாதங்கள் முதல் 6 ஆண்டு 10 மாதங்கள் நிரம்பியிருக்க வேண்டும்.
அதன்படி, 2017-ம் ஆண்டு கர்நாடக அரசு பிறப்பித்திருந்த உத்தரவில், கல்வியாண்டின் ஜூன் 1-ம் தேதி எல்கேஜி வகுப்பில் சேர 3 ஆண்டு 10 மாதங்கள், ஒன்றாம் வகுப்பில் சேர 5 ஆண்டு 10 மாதங்கள் நிரம்பியிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.
2018-ம் ஆண்டில் அரசு பிறப்பித்திருந்த உத்தரவில், ஒன்றாம் வகுப்பில் சேர 5 ஆண்டு 5 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் நிரம்பியிருக்கலாம் என்று கூறியிருந்தது.
இந்நிலையில், இந்த எல்லா உத்தரவுகளையும் திரும்பப் பெற்றுள்ள மாநில அரசு, 2022 - 2023-ம் கல்வியாண்டு முதல் அமல் படுத்தும் வகையில், கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது.
அதன்படி, ஒன்றாம் வகுப்பில் சேர்க்கை பெற கட்டாயம் 6 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்று புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.