நெருக்கடியில் அரசு வங்கிகள்.. ஏடிஎம்களில் பணம் எடுக்க தடை..!

நெருக்கடியில் அரசு வங்கிகள்.. ஏடிஎம்களில் பணம் எடுக்க தடை..!

நெருக்கடியில் அரசு வங்கிகள்.. ஏடிஎம்களில் பணம் எடுக்க தடை..!
X

சீனாவின் ஹெனான் பகுதியில் உள்ள பேங்க் ஆப் சீனாவின் வங்கிக் கிளையில் இருந்து பணம் எடுக்க பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், ஏடிஎம்களில் பணம் எடுக்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், வங்கி ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க காத்திருக்கும் மக்களை மிரட்டும் வகையில் சீன ராணுவம் தெருக்களில் பீரங்கிகளை குவித்துள்ளது.

முதலீட்டாளர்களிடமிருந்து வங்கியைக் காக்கும் வகையில் இந்த நடவடிக்கையை சீன அரசு மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் வங்கிகளில் இருந்து பணம் எடுக்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.

தெருக்களில் பீரங்கிகள் ரோந்து வருவது தியானன்மென் சதுக்கத்தில் 1989-ம் ஆண்டு நிகழ்ந்த பீரங்கிக் குண்டு தாக்குதல் சம்பவத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது என்று மக்கள் கூறுகின்றனர்.

சீன ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் ஜனநாயகம் வேண்டியும் ஜூன் 4, 1989-ம் ஆண்டு பெரும் திரளாக மாணவர்கள் தியானன்மென் சதுக்கத்தில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீசார், ராணுவத்தை அழைத்தனர். ராணுவமும் நிலைமை கைமீறி போவதை உணர்ந்து மாணவர்களை கட்டுப்படுத்த பீரங்கி தாக்குதல் நடத்தியது.

இதில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் உயிரிழந்தனர். சீன வரலாற்றில் மிகப் பெரும் கரும்புள்ளியாக இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

தற்போது நெருக்கடியில் சிக்கியுள்ள வங்கிகளை காப்பதற்காக பீரங்கிகளை சீன அரசு பிரயோகம் செய்துள்ளது அந்த சம்பவங்களை நினைவு படுத்துவதாக உள்ளது.

வாடிக்கையாளர்களின் கடுமையான போராட்டத்தைத் தொடர்ந்து படிப்படியாக டெபாசிட்களை திரும்ப அளிக்கத் தொடங்கியுள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:
Next Story
Share it