பெரும் அதிர்ச்சி.. ஒரு சிலிண்டரின் விலை தடாலடியாக ரூ.2,500 உயர்வு
பெரும் அதிர்ச்சி.. ஒரு சிலிண்டரின் விலை தடாலடியாக ரூ.2,500 உயர்வு

சமையலுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் விலை இலங்கையில் ஏறக்குறைய இருமடங்காக உயர்ந்து 5 ஆயிரத்துக்கும் மேல் விலை அதிகரித்துள்ளது.
இலங்கை தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி விலைவாசி உயர்வால் தத்தளித்து வருகிறது. இந்நிலையில், சிலிண்டர் விலை உயர்வு பொதுமக்களுக்கு கூடுதல் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலை கூட உயர்ந்து பணவீக்கம் தாறுமாறாக உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை கூட உயர்ந்துவிட்டதால் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் செய்து வருகின்றனர்.

மக்களின் கடுமையான போராட்டத்தால் இலங்கையில் அரசியல் நெருக்கடியும் அதிகரித்துள்ளது. இந்த சூழலிலும், சமையலுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் விலை இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குளாகியுள்ளனர்.
12.5 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டரின் விலையை 2500 ரூபாய் உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் 12.5 கிலோ எடை கொண்ட ஒரு சிலிண்டரின் விலை 2675 ரூபாயாக இருந்தது. இந்நிலையில், இன்று (நேறறு 22) நள்ளிரவு முதல் 12.5 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 5,175 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது ஒரு சிலிண்டரின் விலை தடாலடியாக 2500 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் விலை உயர்ந்துள்ளதால் தினசரி 25 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக லிட்ரோ நிறுவனம் கூறுகிறது. நஷ்டத்தை சமாளிப்பதற்காகவே விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in

