பெரும் சோகம்.. மேலும் ஒரு சீரியல் நடிகை சடலமாக மீட்பு !!

பெரும் சோகம்.. மேலும் ஒரு சீரியல் நடிகை சடலமாக மீட்பு !!

பெரும் சோகம்.. மேலும் ஒரு சீரியல் நடிகை சடலமாக மீட்பு !!
X

23 வயது இளம் நடிகை சடலமாக மீட்கப்பட்டிருப்பது திரையுலகிலும், ரசிகர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரு மாதங்களாக அடுத்தடுத்து இளம் நடிகைகள் தற்கொலை செய்துக்கொள்ளும் செயல் அதிகரித்து வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இரு இளம் நடிகைகள், மேற்குவங்கத்தில் ஒரு நடிகை என சிலர் அடுத்தடுத்து தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.

அந்த வகையில் தற்போது மேலும் ஒரு நடிகை இந்த துயர முடிவை எடுத்துள்ளது ரசிகர்களிடம் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

rashmirekha-ojha

23 வயதான ஒடிசா நடிகை ரஷ்மிரேகா ஓஜா ஒடியா தொலைக்காட்சி தொடரான 'கெமிட்டி கஹிபி கஹா' மூலம் புகழ் பெற்றார். ஜூன் 18-ஆம் தேதி, அவர் ஃபோனை எடுக்காததால் அவரது பெற்றோர்கள் சந்தேகமடைந்தனர். அப்போது தான், சந்தோஷ் பத்ரா, ரஷ்மிரேகாவின் மரணம் குறித்த அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பிறகுதான், ரஷ்மிரேகா, சந்தோஷ் பத்ராவுடன் சேர்ந்து வாழ்ந்தது குடும்பத்தினருக்கு தெரிய வந்தது.

நடிகை ஒருவர் தனது காதலனுடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். அந்த வீட்டில் இளம் நடிகை இறந்து கிடந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

rashmirekha-ojha

ரஷ்மிரேகாவின் மரணத்திற்கு அவரது லிவ்-இன் பார்ட்னர் தான் காரணம் என அவரது பெற்றோர்கள் காவல்துறையில் புகாரளித்துள்ளனர். ஆனால் தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என ரஷ்மி எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியுள்ளது. இதனால் பிரேத பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள்.

newstm.in

Tags:
Next Story
Share it