குரூப் 4 தேர்வு – பின்பற்றவேண்டியவை என்னென்ன?

குரூப் 4 தேர்வு – பின்பற்றவேண்டியவை என்னென்ன?

குரூப் 4 தேர்வு – பின்பற்றவேண்டியவை என்னென்ன?
X

நாளை தமிழகம் முழுவதும் 22 லட்சம் பேர் குரூப் 4 தேர்வு எழுத உள்ள நிலையில் அதற்கு பின்பற்றவேண்டிய நடைமுறைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி, தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் வர வேண்டும். 9 மணிக்கு ஓஎம்ஆர் தாள்கள் தேர்வர்களுக்கு வழங்கப்படும். 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும்.

12.45 மணிக்கு முன்னதாக தேர்வர்கள் யாரும், தேர்வறையை விட்டு வெளியேறக்கூடாது. செல்போன்கள் மற்றும் இதர பொருட்களை தேர்வு மையத்துக்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை.

தேர்வர்கள் தங்களுடைய கையெழுத்தை ஓஎம்ஆர் தாளில் இரண்டு இடங்களில் பதிவு செய்ய வேண்டும். இடதுகை பெருவிரல் ரேகையை தேர்வு முடிந்த பின் ஓஎம்ஆர் தாளில் பதிவிட வேண்டும்.

tnpsc

ஓஎம்ஆர் தாளில் கருப்பு பால் பாய்ண்ட் பேனாவைத் தவிர பென்சில் அல்லது வேறு பேனாவில் எழுதக் கூடாது. ஓஎம்ஆர் தாளில் தேர்வர்கள் தங்களுடைய பதிவு எண்ணை கட்டாயமாக குறிப்பிட வேண்டும்.

ஓஎம்ஆர் தாளில் ஒரு கட்டத்தை தவிர ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டங்களை தேர்வர்கள் விடைகளாக குறிக்கக்கூடாது. விடைதெரியாத கேள்விக்கு ஓஎம்ஆர் தாளில் உள்ள E என்கிற கட்டத்தில் Shade செய்ய வேண்டும்

இவற்றை பின்பற்ற வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது. அதே போல் கொரோனா பரவல் இருப்பதால் தேர்வர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளது.

newstm.in

Next Story
Share it