வாரத்தில் 4 நாட்கள் வேலை- அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ் !!

வாரத்தில் 4 நாட்கள் வேலை- அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ் !!

வாரத்தில் 4 நாட்கள் வேலை- அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ் !!
X

இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே அரசு ஊழியர்கள் பணிபுரியும் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் வாரத்தில் 6 நாட்கள், தினசரி 8 மணி நேரம் வேலை என்ற முறை நடைமுறையில் உள்ளது. எனினும் ஒரு சில நாடுகள் இதற்கு விதிவிலக்காக உள்ளன. அந்த பட்டியலில் தற்போது இனைத்துள்ளது பெல்ஜியம்.

மேற்கு ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில், வாரத்தில் நான்கு நாள் மட்டுமே வேலை என்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், இந்த திட்டத்துடன், ஊழியர்களுக்கு மற்றுமொரு பெரிய அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அதாவது, அலுவலக நேரம் முடிந்த பின் அலுவலகம் சம்பந்தப்பட்ட அனைத்து சாதனங்களையும் ஸ்விட்ச் ஆஃப் செய்து வைக்கலாம்.

worker

பணி நேரத்துக்கு பின், அலுவலகம் சம்பந்தப்பட்ட எந்த செய்திகள் மற்றும் அழைப்பிற்கு பதிலளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதனால் பதவி உயர்வு, சம்பள உயர்வு பாதிக்கப்படுமோ என்ற அச்சமில்லாமல் இருக்கலாம். உயர் அதிகாரிகள் அழைத்தால் கூட அதற்கு பதிலளிக்க கட்டாயமில்லை என்று கூறியுள்ளது. இதனை ரைட் டூ டிஸ்கனெட் என்ற திட்டத்தின் மூலம் செயல்படுத்துகிறது பெல்ஜியம் அரசு.

இது குறித்து பெல்ஜியம் நாட்டின் பிரதமர் அலக்சாண்டர் டி க்ரூ கூறியதாவது, மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்று லேபர் சட்டங்களை தலைகீழாக புரட்டி விட்டது. அது மட்டுமின்றி கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான ஊரடங்கு காலத்திலும் நம்முடைய வேலை முறை மிகவும் சீராக மாறியுள்ளது.

worker

எனவே தற்போது இருக்கும் லேபர் மார்க்கெட் அதை முழுவதுமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஏற்கனவே அரேபிய நாடுகளில் நான்கு நாட்ள் வேலை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் தற்போது பெல்ஜியம் நாட்டில் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

சரிப்பா.. இங்கே எப்போ கொண்டுவருவீங்க என இந்தியர்கள் மைண்ட் வாய்ஸ் வெளியே கேட்கிறது..

newstm.in

Tags:
Next Story
Share it