வினாத்தாள் கசிந்தது எப்படி..?: அதிகாரிகளுடன் அன்பில் மகேஷ் ஆலோசனை..!
வினாத்தாள் கசிந்தது எப்படி..?: அதிகாரிகளுடன் அன்பில் மகேஷ் ஆலோசனை..!

தமிழகத்தில் ஒன்று முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
குறிப்பாக, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக மே மாதத்தில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது.
முன்னதாக, 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாகவும், 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் குளறுபடிகளை தடுப்பது தொடர்பாகவும் அனைத்து மாவட்ட முதன்மை செயலர்களுடன் ஆலோசனை நடைபெற உள்ளது.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
Next Story

