IPL: சாம்பியன் யார்? - புது வியூகத்துடன் தயாராகும் குஜராத் டைட்டன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் !
IPL: சாம்பியன் யார்? - புது வியூகத்துடன் தயாராகும் குஜராத் டைட்டன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் !

நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரிட்சை நடத்தவுள்ளன. பலமான குஜராத் அணி தனது முதல் தொடரிலேயே ஐபிஎல் கோப்பையை வெல்லுமா அல்லது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2ஆவது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய இரு புதிய அணிகளின் வரவு காரணமாக இந்த முறை 10 அணிகள் போட்டியில் பங்கேற்றன. மார்ச் 26ஆம் தேதி தொடங்கிய ஆட்டம் 2 மாதங்களை கடந்து இன்று இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. பலம் வாய்ந்த அணிகளாக கருதப்பட்ட சென்னை சூப்பர் கிங்க்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் புள்ளிகள் பட்டியலில் கடைசி இரண்டு இடங்களை பிடித்தன. அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக முன்னேறி அசத்தியது.
இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் பலம் பொருந்திய குஜராத் டைட்டன்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொள்கிறது. இந்த தொடரில் இரு அணிகளும் மோதிக்கொண்ட 2 ஆட்டங்களிலும் குஜராத் அணியே வெற்றி பெற்றுள்ளது.
குஜராத்திடம் தோல்வி அடைந்தாலும் வெளியேற்றுதல் சுற்றில் பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. குஜராத் அணியை பொறுத்தவரை பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் பலம் வாய்ந்து உள்ளது. சுப்மான் கில், ஹர்திக் பாண்ட்யா, டேவிட் மில்லர், ராகுல் திவேதியா,சஹா முகமது ஷமி, ரஷித்கான், யாஷ் தயாள் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர்.
ராஜஸ்தான் அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக ஜோஸ் பட்லர் திகழ்கிறார். 4 சதம், 4 அரைசதம் உள்பட 824 ரன்கள் குவித்து ஆரஞ்ச் கோப்பையை தன்வசம் வைத்துள்ள பட்லர் இந்த போட்டியிலும் அதிரடியை நிகழ்த்த கூடும். பந்து வீச்சில் முன்னேற்றம் ஏற்படும் பட்சத்தில் அந்த அணியை வெள்வது கடினம். ஐபிஎல் போட்டி அறிமுகப்படுத்தப்பட்ட முதல் சீசனில் ராஜஸ்தான் அணி கோப்பையை கைப்பற்றியது. அதன் பின்னர் இதுவரை கோப்பையை கைப்பற்றவில்லை.
எனவே இந்த முறை குஜராத்தை வீழ்த்தி 2வது முறையாக கோப்பையை கைப்பற்றுமா அல்லது தனது அறிமுக தொடரிலேயே கோப்பையை வென்று குஜராத் டைட்டன்ஸ் அசத்துமா என்பது இன்று இரவு தெரிந்துவிடும்.
newstm.in