சிறுவர்கள் வாகனம் ஓட்டினால்.. பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை..!

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால்.. பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை..!

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால்.. பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை..!
X

ஓட்டுநர் உரிமம் இல்லாத சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு அபராதமாக 25 ஆயிரம் ரூபாயுடன், மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என, திருப்பூர் வடக்கு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

விதிமுறைகளை மீறி பள்ளி மாணவர்கள் டூவீலர்கள் ஓட்டி வருவதால், விபத்துகள் அதிகரித்து வருகின்றன. பள்ளி பருவத்திலேயே பலர், வாகன விபத்துகளில் பலியாகும் வேதனை சம்பவங்கள் நடப்பதால், திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து துறை நுாதன அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், 'திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம், 2019 சட்டப்பிரிவு 199 ஏ-ன் படி, உரிய ஓட்டுநர், பழகுநர் உரிமம் பெறாமல் மோட்டார் வாகனங்கள் ஓட்டினால், சிறார்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், இத்துடன் 3 ஆண்டு சிறை தண்டனை நிச்சயம்' என்ற அறிவிப்பு பலகை முக்கிய மாநகர பகுதியில் வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், வாகனம் 12 மாதங்களுக்கு சாலையில் ஓடுவது ரத்து செய்யப்படும். வாகனத்தை ஓட்டிய சிறுவர்கள் தங்களின் 25 வயது வரை எந்தவித ஓட்டுநர் உரிமமும் பெற இயலாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
Share it