இளையராஜா கருத்துக்கு கிளம்பிய கடும் எதிர்ப்பு.. வருத்தம் தெரிவித்த இயக்குனர் மாரி செல்வராஜ் !!

இளையராஜா கருத்துக்கு கிளம்பிய கடும் எதிர்ப்பு.. வருத்தம் தெரிவித்த இயக்குனர் மாரி செல்வராஜ் !!

இளையராஜா கருத்துக்கு கிளம்பிய கடும் எதிர்ப்பு.. வருத்தம் தெரிவித்த இயக்குனர் மாரி செல்வராஜ் !!
X

சமூக வலைதளங்களில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. பலரும் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர். அதாவது, ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் நிறுவனம், 'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சீர்திருத்தவாதிகளின் கருத்துகளும், செயல்பாட்டாளர்களின் அமலாக்கமும் என்ற தலைப்பில் புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார்.

ilayaraja

அதில், பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது, சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள், என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ilayaraja

இளையராஜாவின் இந்தக் கருத்துதான் தற்போது பெரும் சர்ச்சையாக உருவெடுத்து விவாதமாகியுள்ளது. மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடுவது முற்றிலும் தவறானது, தவறான முரணானது என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், இளையராஜா மீதான விமர்சனத்துக்கு எதிராகவும் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, இளையராஜாவின் கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக இயக்குனர் மாரி செல்வராஜ் கருத்து தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜ் கூறுகையில், இளையராஜா மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்; இது குறித்து மேலும் கருத்து சொல்ல விரும்பவில்லை, என்று தெரிவித்துள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it