இந்தியா– இங்கிலாந்து இன்று டி-20 போட்டியில் மோதல்.. ரோகித் இன்- விராட் அவுட் !!

இந்தியா– இங்கிலாந்து இன்று டி-20 போட்டியில் மோதல்.. ரோகித் இன்- விராட் அவுட் !!

இந்தியா– இங்கிலாந்து இன்று டி-20 போட்டியில் மோதல்.. ரோகித் இன்- விராட் அவுட் !!
X

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. கடைசி டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, அடுத்ததாக டி-20 தொடரில் விளையாடுகிறது. இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டி-20 போட்டி இன்று தொடங்குகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரின் முதல் ஆட்டம் சவுத்தாம்டனில் இன்று இரவு 10.30 மணி அளவில் நடைபெறுகிறது.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இன்றைய ஆட்டத்தில் களமிறங்குகிறார். விராட் கோலி, ஜஸ்பிரீத் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோர் 2ஆவது போட்டியில் களமிறங்க உள்ளனர். ரோஹித் சர்மா அணிக்கு திரும்பி உள்ளதால் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு கிடைப்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ் இடம்பிடிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அயர்லாந்துக்கு எதிரான தொடரில் சொப்பியதால் பார்ம்க்கு திரும்பவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

dsf

அதேநேரத்தில், பந்து வீச்சை பொறுத்தவரையில் புவனேஷ்வர் குமார் சிறந்த பார்மில் உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி 20 உலகக் கோப்பைக்கான சிறந்த இந்திய அணியை தேர்வு செய்வதற்கான தொடக்கமாக இத்தொடர் பார்க்கப்படுகிறது. இதனால் இளம்வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில், இங்கிலாந்து அணி ஜாஸ் பட்லர் தலைமையில் களமிறங்குகிறது. பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் இங்கிலாந்து அணி வலுவாகவே இருக்கிறது. ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடிய ஜாஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டன் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு பெரும் சவாலாக இருப்பர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதனால் இப்போட்டி விறுவிறுபாக இருக்கும்.


newstm.in

Tags:
Next Story
Share it