Theme Check

விக்ரம் அளித்த ஊக்கம்.. கட்சியை வலுப்படுத்தும் பணியில் இறங்கிய கமல்ஹாசன்

விக்ரம் அளித்த ஊக்கம்.. கட்சியை வலுப்படுத்தும் பணியில் இறங்கிய கமல்ஹாசன்

விக்ரம் அளித்த ஊக்கம்.. கட்சியை வலுப்படுத்தும் பணியில் இறங்கிய கமல்ஹாசன்
X

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் தமிழ் திரையுலகில் பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியை தொடர்ந்து மேலும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதேநேரத்தில் கட்சியை வலுப்படுத்தவும் அவர் முனைப்பு காட்டிவருகிறார்.

அதன்படி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உத்தரவின் பேரில் மண்டல வாரியாக கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பூந்துறையில் இன்று மாலை முதல் கூட்டம் நடைபெறுகிறது. நாளை கண்டன்விளையிலும், அதற்கு மறுநாள் நாகர்கோவிலிலும் இந்த கூட்டம் நடக்கிறது. நெல்லை மண்டலத்துக்குட்பட்ட இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் சிவ இளங்கோ கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்த உள்ளார்.

kamal

நெல்லை மண்டலத்துக்குட்பட்ட தென்காசி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுடனும் அடுத்தடுத்த நாட்களில் ஆலோசனை நடைபெறுகிறது. மொத்தம் 11 நாட்கள் இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து திருச்சி, மதுரை, விழுப்புரம், சென்னை, கோவை உள்பட 8 மணடலங்களிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டங்களின் கட்சியின் மற்ற மாநில நிர்வாகிகள் பங்கேற்க உள்ளன. மக்கள் நீதி மய்யம் கட்சியில் மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் கட்சியை வலுப்படுத்துவது பற்றியும், உள்ளூர் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று கமல்ஹாசன் அறிவுறுத்தி உள்ளார்.

kamal

இதற்கு அடுத்தகட்டமாக, மண்டல அளவில் கூட்டத்தை நடத்தும் மாநில நிர்வாகிகள், கமல்ஹாசனை விரைவில் சந்தித்து கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்க உள்ளனர். இதன்மூலம் பாராளுமன்ற தேர்தலுக்குள் மக்கள் நீதி மய்யம் கட்சியை வலுப்படுத்த கமல்ஹாசன் திட்டமிட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


newstm.in

Next Story
Share it