குரங்கம்மை பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவைப்படுமா ?உலக சுகாதார அமைப்பு பதில்
குரங்கம்மை பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவைப்படுமா ?உலக சுகாதார அமைப்பு பதில்

கடந்த 7-ம் தேதி இங்கிலாந்தில் இருந்து நைஜீரிய நாட்டிற்கு சென்ற ஒருவருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 15-ம் தேதி தற்போது இங்கிலாந்தைச் சேர்ந்த மேலும் 2 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த 19-ம் தேதி இந்த ஆண்டில் முதன்முதலாக அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் நகரில் குரங்கம்மை பாதிப்பு ஒருவருக்கு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் ஐரோப்பிய நாடுகளான போர்ச்சுகலில் 5 பேருக்கும், பிரிட்டனில் 2 பேரும் குரங்கம்மை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் குரங்கம்மை வேகமாக பரவி வரும் நிலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவைப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் ஆப்பிரிக்காவுக்கு வெளியே இந்த குரங்ம்மைக்கு தடுப்பூசி தேவைப்படும் என்று நம்பவில்லை என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
இந்த அமைப்பின் அதிகபட்ச ஆபத்தான நோய்க்கிருமி குழுவின் தலைவர் ரிச்சர்டு பிபோடி மேலும் கூறும்போது, “தடுப்பூசி மற்றும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளின் வினியோகம் ஒப்பீட்டளவில் குறைந்த அளவில்தான் உள்ளது” என தெரிவித்தார்.
இந்த குரங்கம்மை பரவலை நல்ல சுகாதாரம் கட்டுப்படுத்தும் எனவும் உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.