Theme Check

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. சம்பளம் பெரியளவில் உயரப்போகிறது !

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. சம்பளம் பெரியளவில் உயரப்போகிறது !

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. சம்பளம் பெரியளவில் உயரப்போகிறது !
X

அகவிலைப்படி உயர்வைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்னும் நான்கு சலுகைகள் கிடைக்கவிருக்கின்றன.

7வது சம்பள கமிஷன் பரிந்துரையின்படி, மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு சமீபத்தில் 3 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளித்தது. இதனால் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, தற்போது ஊழியர்களின் சம்பளம் மீண்டும் உயரப் போகிறது. ஊழியர்களின் இன்னும் சில சலுகைகளை உயர்த்த அரசு பரிசீலித்து வருகிறது. அது நடந்தால் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய அளவில் உயர்வு இருக்கும்.

இந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்ட பிறகு, தற்போது மற்ற அலோவன்ஸ்களும் அதிகரிக்கப்பட உள்ளன. இதன்படி ஊழியர்களின் சம்பளம் அடுத்த மாதம் உயரும். இத்துடன், ஊழியர்களுக்கு 3 மாத நிலுவைத் தொகையும் கிடைக்கவிருக்கிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

money

அகவிலைப்படியை உயர்த்திய பிறகு, இப்போது ஊழியர்களின் பயண அலோவன்ஸ் (TA) மற்றும் சிட்டி அலோவன்ஸ் (CA)ஆகியவை உயர்த்தப்படும். அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் அதன் பிறகு தானாகவே TA மற்றும் CA உயர்த்தப்பட்டுவிடும். இதனால் சம்பளத்தில் மிகப் பெரிய உயர்வு இருக்கும்.

வருங்கால வைப்பு நிதி (PF) மற்றும் பணிக்கொடையும் (Gratuity) தொகையும் அதிகரிக்க உள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் மாதாந்திர பிஎஃப் மற்றும் பணிக்கொடை அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் இருந்துதான் கணக்கிடப்படுகிறது. எனவே, அகவிலைப்படி அதிகரிப்பால் PF மற்றும் Gratuity அதிகரிப்பதும் உறுதி.

money

அகவிலைப்படி உயர்வு காரணமாக, மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகைப் படி, பயணப் படியிலும் உயர்வு இருக்கும். ஒரே நேரத்தில் நான்கு சலுகைகளை அதிகரிப்பதன் பலனை அரசு ஊழியர்கள் பெறலாம். கடந்த 9 மாதங்களில் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, 50 லட்சம் ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் பெறுவார்கள். ஆனால், இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.9455.50 கோடி சுமை ஏற்படும். இதுதவிர மத்திய ஊழியர் அமைப்பும் 18 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்றுஅரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

Next Story
Share it