குவியும் பாராட்டுக்கள்..!! நொடி பொழுதில் தண்டவாளத்தில் தவறி விழுந்த நபரை காப்பாற்றிய போலீசார்..!!
குவியும் பாராட்டுக்கள்..!! நொடி பொழுதில் தண்டவாளத்தில் தவறி விழுந்த நபரை காப்பாற்றிய போலீசார்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் ரயில் நிலையத்தில் ரயில் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் நபர் ஒருவர் நடைமேடையில் இருந்து தண்டவாளத்தில் எதிர்பாரத விதமாக தவறி விழுந்தார். மீண்டும் நடைமேடையில் ஏற முயன்ற போது அவரால் ஏற முடியவில்லை.

இந்நிலையில் அவர் மீண்டும் நடைமேடையில் ஏற சிரமப்படுவதைக் கண்ட ரயில்வே போலீசார், தண்டவாளத்தின் இருபுறமும் அவருக்கு உதவி செய்து, அவரை பாதுகாப்பாக மேலே இழுத்தனர்.
அந்த நபர் காப்பாற்றப்பட்ட சில நொடிகளில் ரயில் நடைமேடையை வந்து அடைந்தது. இதுகுறித்த சிசிடிவி வீடியோ காட்சியை ரயில்வே அமைச்சகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.
Prompt response by RPF personnel saved the precious life of a man who slipped and fell on tracks minutes before the arrival of a train at KR Puram Railway Station, Bengaluru. pic.twitter.com/P0CXy3JfvH
— Ministry of Railways (@RailMinIndia) July 16, 2022

