சீனாவில் குறைந்த கொரோனா.. நீடிக்கும் ஊரடங்கால் மக்கள் விரக்தி !!
சீனாவில் குறைந்த கொரோனா.. நீடிக்கும் ஊரடங்கால் மக்கள் விரக்தி !!

சீனாவின் பொருளாதார தலைநகரமான ஷாங்காயில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து ஊரடங்கு பொதுமுடக்கத்தை அந்நாட்டு அரசு அறிவித்தது. 2.5 கோடி மக்கள் வசிக்கிற இந்த நகரில் நீண்ட காலமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் ஷாங்காய் நகரில் கொரோனா பாதிப்பு தீவிரமடையத் தொடங்கியது. முக்கியமானதாக கொரோனா பாதித்தவர்கள், அவர்களுடன் இருந்தவர்கள் கட்டாயம்ட அரசு தனிப்படுத்தும் மையத்துக்குச் சென்றாக வேண்டும். அங்குச் செல்வோர் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாவதாகவும் அடிப்படைத் தேவைகளுக்காக அவதிப்படுவதாகவும் சில வீடியோக்கள் வெளியாகிவந்தன. இதுபோல வயதானவர்கள் தனிமைப்படுத்தும் முகாம்களுக்குச் செல்லும் போது அவர்கள் உதவியாளர்கள் இன்றி கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
அதாவது தினமும் குறைவான அளவே தொற்று பாதிப்பு இருந்தபோதும் கட்டுப்பாடுகளை மிக கடுமையாக்கியது சீனா. மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வருவதற்கு கூட தடை உள்ளது. இதனால் அவர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
இதன் தொடக்கமாக தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அங்குள்ள மக்களில் சிலர் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தங்கள் வளாகங்களை விட்டு வெளியேறி தெருக்களில் இறங்கினர். அடுத்த நாள் காலையில் அவர்கள் சுதந்திரமாக தெருக்களில் நடமாடினர் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
பல வளாகங்களில் இதே போன்ற நிகழ்வுகள் நடக்கிறதாம். தற்போது அந்த நகரின் 2 கோடியே 10 லட்சம் மக்கள் முன் எச்சரிக்கை மண்டலம் என வரையறுக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் சில மணி நேரம் வெளியே செல்லலாம். ஆனால் அதற்கு பாஸ் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இதற்கிடையே ஷாங்காய் நகரில் அடுத்த மாதம் இயல்பு வாழ்க்கை திரும்பி விடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொற்று குறைந்தபோதும் சில தளர்வுகள் அளித்தாலும் அதனை மக்கள் பயன்படுத்த முடியவில்லை என்றும் கடுமையான கட்டுப்பாடுகளையே பின்பற்றுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
newstm.in