Theme Check

மினிமம் பேலன்ஸ் தொகை உயர்வு.. திடீர் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி !!

மினிமம் பேலன்ஸ் தொகை உயர்வு.. திடீர் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி !!

மினிமம் பேலன்ஸ் தொகை உயர்வு.. திடீர் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி !!
X

தனியார் வங்கியான ஆக்ஸிஸ் பேங்க் (Axis Bank) மினிமம் பேலன்ஸ் தொகையை உயர்த்தியுள்ளது வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.

வங்கி வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்குகளுக்கு மாதாந்தர மினிமம் பேலன்ஸ் தொகை எனப்படும் குறைந்தபட்ச தொகையை பராமரிக்க வேண்டும். பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளுக்கு ஏற்ப மினிமம் பேலன்ஸ் தொகை வேறுபடும்.

மினிமம் பேலன்ஸ் தொகை சரியாக பராமரிக்காவிட்டால் அதற்காக வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மினிமம் பேலன்ஸ் தொகை வங்கிக்கு ஏற்பவும், கணக்குதாரரின் ஊருக்கு ஏற்பவும், கணக்கின் வகைக்கு ஏற்பவும் வேறுபடுகிறது.

bank loan

இந்நிலையில், மெட்ரோ நகரங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஈசி சேவிங்ஸ் (Easy Savings) சேமிப்புக் கணக்கு மற்றும் அதற்கு நிகரான சேமிப்புக் கணக்குகளுக்கு மினிமம் பேலன்ஸ் தொகை 10000 ரூபாயில் இருந்து 12000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக ஆக்ஸிஸ் வங்கி தெரிவித்துள்ளது.

அதேபோல, இலவச பணப் பரிவர்த்தனை வரம்பும் மாதத்துக்கு 2 லட்சம் ரூபாயில் இருந்து 1.5 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it