அமைச்சர்களுக்கு இனி சம்பளம் இல்லை.. அரசு அதிரடி உத்தரவு !
அமைச்சர்களுக்கு இனி சம்பளம் இல்லை.. அரசு அதிரடி உத்தரவு !

இலங்கையில் பொருளாதார சீர்குலைவு, அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு போன்றவற்றால் அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இலங்கை அரசும் திவாலாகி இருக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத அளவு விலை உயர்ந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தினர். இதனால் ஏற்பட்ட நெருக்கடியால் பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்து புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றார்.
புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே, இலங்கை மக்களுக்கு ஒருநாளுக்கு இருவேளை உணவு மட்டும் கிடைக்கும் சூழல் ஏற்படும் என்றும், இலங்கைக்கு இன்னும் நிதியுதவி தேவை என்றும் அவர் கூறியுள்ளார். அதேநேரத்தில், ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றவுடன் செலவினங்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இலங்கையில் ஒரு ஆண்டு காலத்திற்கு ஊதியமின்றி பணியாற்ற அமைச்சர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர்களே முன் வந்து தங்களுக்கு சம்பளம் வேண்டாம் என்று கூறியுள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நடவடிக்கையால் இலங்கை பொருளாதாரம் முழுமையாக மீளாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
newstm.in