என் மாமனார் பாலியல் தொல்லை கொடுத்து தாக்குகிறார்.. துணை நடிகை பரபரப்பு புகார் l!!
என் மாமனார் பாலியல் தொல்லை கொடுத்து தாக்குகிறார்.. துணை நடிகை பரபரப்பு புகார் l!!

மாமனார் பாலியல் தொல்லை கொடுத்து தாக்குதல் நடத்தியதாக துணை நடிகை அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்த மாங்காடு அருகே கெருகம்பாக்கம் பகுதியில் பிரபல துணை நடிகை வசித்து வருகிறார். இவர் ரஜினியின் அண்ணாத்த, எதற்க்கும் துணிந்தவன், சிவகுமார் சபதம், நட்பே துணை, தேவராட்டம், துப்பறிவாளன் படங்களிலும், சீரியலில் பேரன்பு உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார்.
இதனிடையே 17 ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு சுரேஷ்குமார் என்பவருடன் திருமணமாகி ஆனது. இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இவர் காவல்துறையில் அளித்துள்ள புகார் சினிமா துறையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகார் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகை, நான் நடிகையாக இருப்பதால் என் மாமனார் சரவணவேல், மாமியார் சாந்தி ஆகியோர் என்னை மதிப்பதில்லை. பல முறை என் மாமனார் நீ நடிகை தானே என கேட்டு என் மீது உடல் ரீதியாக அத்துமீற முயன்றுள்ளார்.
இது குறித்து காவல் துறையினரிடம் பல முறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சில தினங்களுக்கு முன்பு கூட என் மாமனார் என்னை நிர்வாணப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். நான் அவரை தடுத்ததால் பெரிய மர கட்டையை கொண்டு என் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினார். இதனால் பலத்த காயம் அடைந்த நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன்.
மாமனாரை கைது செய்து தனக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இதனிடையே துணை நடிகையை அவரது மாமனார் தாக்கும் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் புகாரை ஏற்று போலீசார், துணை நடிகையின் மாமனார் மற்றும் மாமியாரை விசாரிக்க முயன்ற போது அவர்கள் தலைமறைவானர். அவர்களை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.
newstm.in