நிர்வாணமாக நடிச்ச சீன்.. பயில்வானை அடிக்கபாய்ந்த இரவின் நிழல் பட நடிகை !

நிர்வாணமாக நடிச்ச சீன்.. பயில்வானை அடிக்கபாய்ந்த இரவின் நிழல் பட நடிகை !

நிர்வாணமாக நடிச்ச சீன்.. பயில்வானை அடிக்கபாய்ந்த இரவின் நிழல் பட நடிகை !
X

பார்த்திபன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் இரவின் நிழல். இது நான் லீனியர் முறையில் படமாக்கப்பட்ட உலகின் முதல் சிங்கிள் ஷாட் திரைப்படமாகும். வெளியானது முதல் இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அதேபோல் பாக்ஸ் ஆபிஸிலும் இப்படம் நல்ல வசூல் செய்து வருகிறது. இதனால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

இப்படத்தில் நடிகை பிரிகிடா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஆஹா கல்யாணம் என்ற வெப்தொடரில் பவி டீச்சராக நடித்து பிரபலமானார். இயக்குநராக வேண்டும் என்ற லட்சத்தில் இருந்த இவர், உதவி இயக்குநராகும் வாய்ப்பு தேடி நடிகர் பார்த்திபனை அனுகியுள்ளார். ஆனால், அவரோ நடிகையாக அழகுபார்த்து படத்தில் நடிக்கவைத்துவிட்டார்.

pavi teacher

இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. அதேவேளையில் இரவின் நிழல் படத்தில் நிர்வாணமாக நடித்துள்ளார். மற்றொரு நடிகையான ரேகா நாயரும் படத்தில் அரைநிர்வாணமாக நடித்துள்ளார். இது தற்போது சர்ச்சையாகியுள்ளது. ‘இந்த சர்ச்சைகளுக்கு காரணம் நடிகர் பயில்வான் ரங்கநாதன் தான்.

குறிப்பாக நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் குறித்து யூடியூபில் பேசி சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் பயில்வான் ரங்கநாதன். சமீபத்தில் இரவின் நிழல் பற்றி பேசுகையில், பாசிடிவ்வான விமர்சனங்களை சொன்னாலும், இப்படத்தில் அரை நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்திருந்த நடிகை ரேகா நாயரை இழிவுபடுத்தி பேசியதாக புகார் எழுந்தது.

reka nayar

இதனால் கடுப்பான ரேகா நாயர், நேற்று சென்னை திருவான்மியூர் கடற்கரையில் வாக்கிங் சென்ற பயில்வான் ரங்கநாதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நான் நிர்வாணமா நடிச்சா உனக்கென்ன என ரேகா நாயர் கேட்க, பதிலுக்கு நீ அம்மணமா நடிச்சா அப்படித்தான் பேசுவேன் என பயில்வான் கூறியதால் வாக்குவாதம் முற்றியது.

இதையடுத்து கோபமடைந்த ரேகா நாயர், பயில்வான் ரங்கநாதனை அடிக்க பாய்ந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் தடுத்து அவர்களை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் நடிகை ராதிகாவும் தன்னை இழிவாக பேசியதற்காக பயில்வான் ரங்கநாதனிடம் பெசண்ட் நகர் பீச்சில் வைத்து சண்டையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:
Next Story
Share it