நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது..!
நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது..!

மத்திய அரசு சார்பில், நாடு முழுவதும் வெளியான சிறந்த படங்களுக்கு ஆண்டுதோறும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. சிறந்த நடிகர், நடிகை, திரைப்படம், இசையமைப்பாளர் உட்பட ஏராளமான பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் இந்த விருதுகள், திரைத்துறையினரின் மிகப் பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், 68வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று (22-ம் தேதி) மாலை டெல்லியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில், ஆஸ்கர் வரை சென்று திரும்பிய சூர்யாவின் ‘சூரரைப் போற்று’, விஜய் சேதுபதி நடித்துள்ள ‘கா/பெ.ரணசிங்கம்’ ஆகிய படங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்ற ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு இந்த விருது கிடைத்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.