புதிய தேசிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா!!

புதிய தேசிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா!!

புதிய தேசிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா!!
X

தடகள உலகில் மிகவும் மதிப்பு மிக்க தொடர்களில் ஒன்று டைமெண்ட் லீக் தொடர். இந்தத் தொடரின் லீக் சுற்றுப் போட்டி சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்றது. இதில் ஈட்டி ஏறிதலில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இந்த போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு கொடுக்கப்பட்ட முதல் வாய்ப்பில் 89.94 மீட்டர் தூரம் வீசி புதிய தேசிய சாதனையை படைத்தார். அத்துடன் தனது முந்தைய தேசிய சாதனையான 89.30 மீட்டர் தூரத்தை அவரே முறியடித்தார்.

Neeraj-chopra

அதனைத் தொடர்ந்து, அடுத்த ஐந்து வாய்ப்புகளில் 84.37 மீ, 87.46 மீ, 84.77 மீ, 86.67 மீ, 86.84 மீ தூரம் ஈட்டி ஏறிந்தார். இதன்மூலம் இந்த லீக் சுற்று போட்டியில் 89.94 என்ற சிறந்த தூரத்தை பதிவு செய்து இரண்டாவது இடத்தை பிடித்தார்.

உலக சாம்பியனான கிரெனடா நாட்டின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் இந்த முறை 90.31 தூரம் வீசி தங்கம் வென்றார். இதுவே அவரது 3வது முயற்சியில் வந்தது. ஆண்டர்சன் பீட்டர்ஸ் இருமுறை 90 மீ தூரத்தை இந்த சீசனில் கடந்துள்ளார். டைமண்ட் லீகின் தோஹா லெக்கில் 93.07மீ, நெதர்லாந்தில் 90.75மீ வீசி எறிந்தார்.

ஜெர்மனியின் ஜூலியன் வீபர் தனது 5வது முயற்சியில் 89.08மீ தூரம் எறிந்து வெண்கலம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக் வெள்ளிப்பதக்கம் வென்ற ஜேகப் வாட்லீயிச் 88.59மீ வீசி எறிந்து 4வது இடமே பிடிக்க முடிந்தது.

இந்தப் புதிய தேசிய சாதனை குறித்து நீரஜ் சோப்ரா, “இன்று நான் நிச்சயம் 90 மீட்டருக்கு மேல் வீசுவேன் என்று நினைத்தேன். எனினும் அது நடக்கவில்லை. மெல்ல மெல்ல என்னுடைய தூரம் அதிகரித்து வருகிறது. அது எனக்கு நல்ல விஷயம் தான்” எனக் கூறினார்.


Tags:
Next Story
Share it