இயற்கையின் தடையையும் தகர்த்து தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா !!

இயற்கையின் தடையையும் தகர்த்து தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா !!

இயற்கையின் தடையையும் தகர்த்து தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா !!
X

குர்டேன் விளையாட்டுப் போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

ஃபின்லாந்து நாட்டில் குர்டேன் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் டிரினிடாட்&டொபாகோ வீரர் கேஷோர்ன் வால்காட், கிரெனடாவின் உலக சாம்பியனான ஆண்டர்சன் பீட்டர்ஸ் ஆகியோரை முறியடித்து 86.69 மீட்டர் தூரம் எறிந்து சோப்ரா தங்கம் வென்றார்.

அதாவது, முதலில் நீரஜ் ப்ரா 86.69 மீ எறிந்து அதைத் தொடர்ந்து இரண்டு முறை ஃபவுல் செய்தார். பின்னர் அவர் மீதமுள்ள மூன்று வீசுதல்களை முயற்சி செய்வதிலிருந்து விலகினார், அவரது முதல் எறிதலே அவருக்கு தங்கம் பெற்றுக்கொடுக்கும் அளவுக்கு வலிமையாக அமைந்தது.

Neeraj-Chopra

இதனிடையே, போட்டியின் போது மழை பெய்தது வீரர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் 3ஆவது முயற்சியில் சோப்ரா மழையினால் ஸ்லிப் ஆனார். அதனால் காயமடையும் ஆபத்து இருக்கிறது என அடுத்தடுத்த த்ரோவை செய்யும் முயற்சிகளில் இருந்து நீரஜ் சோப்ரா விலகினார்.

இருப்பினும், வால்காட் 86.64 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 86.69 மீட்டர் தூரம் எறிந்து சோப்ரா தங்கம் வென்றார். இந்த வார தொடக்கத்தில், டோக்கியோவில் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கம் வென்ற பிறகு தனது முதல் போட்டியில் பின்லாந்தில் நடந்த பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டியில் சோப்ரா 89.30 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளி வென்றதோடு புதிய தேசிய சாதனையைப் படைத்தார்.

கடந்த ஆண்டு பாட்டியாலாவில் 88.07 மீ., துாரம் எறிந்து தனது முந்தைய சாதனையை முறியடித்தார்.


newstm.in

Tags:
Next Story
Share it