அடுத்த போர் சூழல்.. சீனாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை.. உடனே பதிலடி !!

அடுத்த போர் சூழல்.. சீனாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை.. உடனே பதிலடி !!

அடுத்த போர் சூழல்.. சீனாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை.. உடனே பதிலடி !!
X

தைவான் மீது சீன ராணுவ அடக்குமுறையை நிகழ்த்தினால் தைவானுக்கு அமெரிக்கா துணை நிற்கும் அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜப்பானில் குவாட் உச்சி மாநாட்டு நடைபெற்று வருகிறது. இதில், பங்கேற்க இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், சீனா-தைவான் விவகாரம் குறித்து அமெரிக்க அரசின் நிலைப்பாட்டை விளக்கினார். அமெரிக்கா, ஒரு சீனா என்ற பார்வையை கொண்டுள்ளது. அது மக்கள் குடியரசு சீனா என்ற ஒரு சீன அரசை மட்டுமே குறிக்கும். மாறாக, தைவானும் சீனாவின் அங்கம் என்ற கூற்றை அமெரிக்கா அங்கீகரிக்காது.

china

ஒரு வேளை, தனது ராணுவ பலத்தை பயன்படுத்தி சீனா, தைவானை கைப்பற்ற நினைத்தால் அமெரிக்கா தனது ராணுவத்தை தைவானுக்கு ஆதரவாக நிறுத்தும். ரஷ்யா, உக்ரைனை கைப்பற்ற முயற்சிப்பது போலத் தான் சீனா, தைவானை கைப்பற்ற நினைத்தால் விளைவுகள் இருக்கும். எனவே, இதுபோன்ற செயல்களில் சீனா செயல்படாது என நினைக்கிறேன். இது தொடர்பாக உலக நாடுகளும் சீனாவுக்கு அழுத்தம் தர வேண்டும், என்றார்.

அதேநேரத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இந்த கருத்துக்கு சீனா உடனடியாக பதிலடி கொடுத்துள்ளது. தைவான் விவகாரம் சீனாவின் உள்நாட்டு விவகாரம். சீனாவை சேர்ந்த பகுதியே தைவான். சீனாவின் இறையாண்மை சார்ந்த விவகாரத்தில் எந்த சமரசமும் கிடையாது. சீனாவின் வலிமையை, திறனை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம், என சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வாங்க் வென்பின் கூறியுள்ளார்.

china

தைவான் தன்னுடைய பகுதிதான் என சீனா தொடர்ந்து கூறி வரும் நிலையில், தன்னுடைய சுய ஆட்சி தன்மையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது என தைவான் அரசு தொடர்ந்து கூறிவருகிறது. ஏற்கனவே ரஷ்யா- உக்ரைன் போர் உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ள நிலையில், இது அடுத்த போர் ஏற்பட வாய்ப்பாக உள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it