இந்திய குடியுரிமை வேண்டாம்.. ஒரே ஆண்டில் 1.63 லட்சம் பேர் வெளியேறினர் !!

இந்திய குடியுரிமை வேண்டாம்.. ஒரே ஆண்டில் 1.63 லட்சம் பேர் வெளியேறினர் !!

இந்திய குடியுரிமை வேண்டாம்.. ஒரே ஆண்டில் 1.63 லட்சம் பேர் வெளியேறினர் !!
X

இந்தியாவில் இருந்து கடந்தாண்டு மட்டும் 1.63 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

லோக்சபாவில் இந்திய குடியுரிமையை துறந்தவர்கள் குறித்த கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், வெளியுறவு அமைச்சகம் அளித்துள்ள தகவலின்படி பல்வேறு தனிப்பட்ட காரணங்களுக்காக 2019ஆம் ஆண்டில் 1,44,017 பேரும், 2020ஆம் ஆண்டில் 85,256 பேரும், 2021ஆம் ஆண்டில் 1,63,370 பேரும் என கடந்த 3 ஆண்டுகளில் 3,92,643 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை விட்டுக் கொடுத்துள்ளனர்.

xcv

இவா்கள் அனைவரும் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளனர். அதிகபட்சமாக 1,70,795 பேர் அமெரிக்க குடியுரிமையும், 64,071 பேர் கனடா குடியுரிமையும், 58,391 பேர் ஆஸ்திரேலிய குடியுரிமையும், 35,435 பேர் பிரிட்டன் குடியுரிமையும் பெற்றுள்ளனர். 2015 முதல் 2021 வரை மொத்தம் 9.24 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர், என அவர் பதிலளித்தார்.

நாளுக்கு நாள் இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு சென்று குடியேறுவது அதிகரித்து வருகிறது. இது ஆரோக்கியமானது அல்ல என்று ஒருதரப்பினர் கூறுகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it