எதுவுமே சரியில்ல.. டோல்கேட்டுக்கு ரூ.400 கோடி அபராதம்.. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடி..!

எதுவுமே சரியில்ல.. டோல்கேட்டுக்கு ரூ.400 கோடி அபராதம்.. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடி..!

எதுவுமே சரியில்ல.. டோல்கேட்டுக்கு ரூ.400 கோடி அபராதம்.. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடி..!
X

தூத்துக்குடி மாவட்டம், புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடிக்கு பராமரிப்பு சரியில்லை என‌ தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 400 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், புதூர் பாண்டியாபுரத்தில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த சுங்கச்சாவடி, கடந்த சில ஆண்டுகளாக சரியான பராமரிப்பு இல்லாமல் வாகன ஓட்டிகளிடம் சுங்கக் கட்டணம் வசூலித்து வந்த‌து.

கடந்த 2021-ம் ஆண்டு, இந்த சுங்கச்சாவடிக்கு உட்பட்ட நெடுஞ்சாலையை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, பல பணிகள் முடிக்க பெறாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பணிகளை விரைவாக முடிக்கும்படி அதிகாரிகள் எச்சரித்துச் சென்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி - மதுரை நான்கு வழிச் சாலையில் விளக்குகள் பொருத்தாது, எதிரே வரும் வாகனங்கள் கண் கூசாமல் இருக்க சாலையின் நடுவே செடிகள் வைக்காமல் இருப்பது, சாலையின் இரு பக்க எல்லையை குறிக்கும் வண்ணக்கோடுகள், பாதசாரிகள் வாகனங்களை நிறுத்துவதற்கான இடம், கழிப்பறை வசதிகள், இணைப்புச் சாலை குறியீடு, பல இடங்களில் பேருந்து நிறுத்தம் இல்லாதது, சிப்காட் அருகே ரயில்வே மேம்பாலம் போடப்படாததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

இதையடுத்து, அரசின் உத்தரவை பின்பற்ற தவறியதாக அந்த நிறுவனத்துக்கு 400 கோடி ரூபாய் அபராதம் விதித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Next Story
Share it