வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!
X

மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆண்டுதோறும் ஆடிப்பூரம் விழா சிறப்பாக கொண்டாடப்படும். கடந்த 1972-ம் ஆண்டு முதல் ஆடிப்பூரம் விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 51வது ஆடிப்பூரம் விழா கோலாகலமாக வரும் 1-ம் தேதி நடைபெற உள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் எதுவுமின்றி 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஆடிப்பூர விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.

இந்நிலையில், மேல்மருவத்தூர் கோவிலில் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார்.

Local-holiday

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் திருவிழா வருகிற ஆகஸ்ட் 1-ஆம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளுா் விடுமுறை நாள், ஆகஸ்ட் 13-ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக ஈடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it