ஒருபுறம் மக்கள் கொண்டாட்டம்.. மறுபுறம் சிறுமியை எரித்துக்கொலை செய்த கொடூரம் !
ஒருபுறம் மக்கள் கொண்டாட்டம்.. மறுபுறம் சிறுமியை எரித்துக்கொலை செய்த கொடூரம் !

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர், குடியரசுத் தலைவராக பதவியேற்றிருப்பதை அம்மாநில கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், பென்சில் வாங்கச் சென்ற 14 வயது சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலாசோர் மாவட்டத்தில் 8ஆம் வகுப்புப் படித்துவந்த மாணவி, 28 வயது வயதான தயாநிதி ஜேனா என்பவரின் மனைவியிடம் கல்வி பயின்று வந்துள்ளார். வீட்டில் இருந்த சிறுமி கல்வி கற்றுவந்த ஆசிரியை வீட்டுக்கு நேற்று காலை பென்சில் வாங்கச் சென்றுள்ளார். அப்போது தயாநிதி ஜேனா வலுக்கட்டாயமாக அருகிலிருக்கும் கழிப்பறைக்குள் இழுத்துச் சென்று அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தீ வைத்ததில் சம்பவ இடத்திலேயே சிறுமி துடிதுடித்து இறந்துபோனார். தயாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில், பாலியல் பலாத்காரத்துக்கு மறுத்ததால் சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர். தயாநிதியின் வீட்டுக்கு கல்வி படிக்க அந்தசிறுமி சென்று வந்துள்ளார். ஆனால், திடீரென சிறுமி அங்குச் செல்வதை நிறுத்திவிட்டார் என பெற்றோர் கூறுகின்றனர்.
இது குறித்து ஜேனாவின் மனைவியிடம் கேட்டதற்கு, ஒரு சில மாதமாக சிறுமி தன்னிடம் கல்வி பயில வருவதில்லை என்றும், எதற்கான தனது கணவர் இந்தக் கொலையைச் செய்தார் என்று தெரியவில்லை. ஆனால் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
newstm.in