யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது சரமாரி தாக்குதல்- பகீர் வீடியோ !!
யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது சரமாரி தாக்குதல்- பகீர் வீடியோ !!

8ஆவது சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. இந்தியாவில் பிறந்தாலும் தற்போது பல்வேறு நாடுகளில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த யோகா நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று யோகா செய்து வருகின்றனர். மேற்கத்திய நாடுகளிலும் யோகா பரவியுள்ளது.
அந்த வகையில் இந்தியாவின் அருகே அமைந்துள்ள தீவு நாடான மாலத்தீவிலும் இன்று யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அந்நாட்டின் தலைநகர் மெலில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் மாலத்தீவு அரசு மற்றும் இந்திய கலாச்சார மையம் சார்பில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தது. அதன்படி கால்பந்து மைதானத்தில் இன்று காலை ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்துகொண்ட யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
அப்போது, திடீரென 50க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் மைதானத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டது. யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த நபர்கள் மீதும் அந்த கும்பல் சரமாரி தாக்குதல் நடத்தியதோடு நிகழ்ச்சியையும் நிறுத்தியது. யோகா நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகி மாலத்தீவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும் கும்பல் மைதானத்திற்குள் நுழைவதை கண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து வெளியேற முயற்சித்தனர். ஆனாலும், அந்த கும்பல் விரட்டிச்சென்று தாக்குதலில் ஈடுபட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தடியடி நடத்தி கும்பலை கலைத்தனர்.
மேலும், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள மாலித்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சொலிக் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
Dramatic visuals from Maldives as group of extremists disrupt Yoga Day celebrations organised in capital Male pic.twitter.com/es9q3y5g2o
— Sidhant Sibal (@sidhant) June 21, 2022
newstm.in