Theme Check

PF பணத்துக்கு குவியும் மக்கள்.. வியக்க வைக்கும் எண்ணிக்கை !

PF பணத்துக்கு குவியும் மக்கள்.. வியக்க வைக்கும் எண்ணிக்கை !

PF பணத்துக்கு குவியும் மக்கள்.. வியக்க வைக்கும் எண்ணிக்கை !
X

நிறுவனங்களில் வேலைக்கு சேருபவர்களின் மாத சம்பளத்தில் குறிப்பிட்ட ஒரு தொகை பிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட ஊழியரின் பெயரில் பிஎஃப் பணமாக சேமித்து வைக்கப்படுகிறது. அந்த நிறுவனம் தரப்பிலிருந்தும் அதே அளவு பங்களிப்பு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படுகிறது. அதேபோல, பிஎஃப் சேமிப்பு பணத்துக்கும் வட்டி லாபமும் கிடைக்கிறது. இதுபோன்ற நிறைய அம்சங்கள் பிஎஃப் திட்டத்தில் உள்ளன.

மாத சம்பளத்தில் பிஎஃப் பணம் பிடிக்கப்படுவது சிலருக்கு ஒவ்வொரு மாதமும் நெருக்கடியைத் தரலாம். ஆனால் பின்னாட்களில் ஒரு பெரிய தொகை நம் கையில் கிடைக்கும்போது, வீடு கட்டுவதற்கு, திருமணத்துக்கு, பிள்ளைகளின் உயர் கல்விக்கு என பல்வேறு காரியங்களுக்கு இந்த பிஎஃப் பணம் பெரிதும் உதவியாக இருக்கின்றன. இதுபோன்ற பயன்களால் நிறையப் பேர் பிஎஃப் திட்டத்தில் இணைந்து சேமிக்கின்றனர்.

central

இந்நிலையில் பிஎஃப் திட்டத்தில் அதிகப் பேர் இணைந்துள்ளதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தெரிவித்துள்ளது. அதாவது, 2022 பிப்ரவரி மாதத்தில் மட்டும் 14.12 லட்சம் பேர் பிஎஃப் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இது 2021 பிப்ரவரி மாத எண்ணிக்கையை விட 14 சதவீதம் அதிகமாகும். அப்போது இந்த எண்ணிக்கை 12.37 லட்சமாக மட்டுமே இருந்தது. இந்த விவரங்களை மத்திய தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

2021 ஏப்ரல் மாதம் முதல் 2022 பிப்ரவரி மாதம் வரையில் மொத்தம் 1.11 கோடிப் பேர் தங்களை பிஎஃப் திட்டத்தில் இணைத்துள்ளனர். 2019-20 காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 78.58 லட்சமாக மட்டுமே இருந்தது. 2022 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது 2022 பிப்ரவரி மாதத்தில் 31,826 பேர் அதிகமாக இணைந்துள்ளனர். அதேபோல, 2021 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது 1,74,314 பேர் அதிகமாக இணைந்திருக்கின்றனர்.

central

2021 அக்டோபர் மாதம் முதல் பிஎஃப் திட்டத்தில் இணைவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. 2022 பிப்ரவரி மாதத்தில் புதிதாக இணைந்துள்ள 14.12 லட்சம் பேரில் 5.71 லட்சம் பேர் ஏற்கெனவே வெளியேறி மீண்டும் இணைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Next Story
Share it