மீண்டும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு.!!
மீண்டும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு.!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்குப் பின் எரிபொருள் விலை மீண்டும் ஏறுமுகம் கண்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த 137 நாட்களாக ஒரே விலையில் நீடித்த பெட்ரோல், டீசல் கடந்த 22-ம் தேதி அதிகரித்தது. அதன்படி, கடந்த 22-ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 101.16 ரூபாய்க்கும், டீசல் 92.19 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கடந்த 23-ம் தேதி 2-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 0.75 காசுகள் அதிகரித்து 102.91 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 0.76 காசுகள் அதிகரித்து 92.95 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், 2 நாட்கள் விலை ஏற்றத்திற்கு பின் சென்னையில் நேற்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 102.91 ரூபாய்க்கும், டீசல் 92.95 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று சென்னையில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு தலா 76 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் 103.67 ரூபாய்க்கும், டீசல் 93.71 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.