பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு.. ரூ.500-ஐ தாண்டியது !!

பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு.. ரூ.500-ஐ தாண்டியது !!

பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு.. ரூ.500-ஐ தாண்டியது !!
X

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அனைத்துவித அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல மணி நேரம் காத்திருந்து எரிபொருள் நிரப்ப வேண்டிய நிலை காணப்படுகிறது. பல்வேறு நகரங்களில் எரிபொருள் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

protest

இந்த நிலையில் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை இன்று முதல் மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி டீசல் விலையை 15 சதவீதமும் பெட்ரோல் விலையை 25 சதவீதமும் சிலோன் பெட்ரோலிய நிறுவனம் உயர்த்தியுள்ளது.

protest

விலை உயர்வை தொடர்ந்து இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.550-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.460-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இலங்கை மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் அரசுக்கு எதிராகவும் அதிபர் பதவி விலகக்கோரியும் அந்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.


newstm.in

Tags:
Next Story
Share it