அதானிக்கு திட்டத்தை கொடுக்க பிரதமர் மோடி அழுத்தம்.. இலங்கை மின்சார சபை தலைவர் ராஜினாமா !!
அதானிக்கு திட்டத்தை கொடுக்க பிரதமர் மோடி அழுத்தம்.. இலங்கை மின்சார சபை தலைவர் ராஜினாமா !!

இந்திய பிரதமர் மோடி கூறியதாக சர்ச்சை எழுந்த நிலையில், இலங்கையின் மின்சார சபை தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராகவும், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரியும் மக்கள் போராடி வருகின்றனர். அதேநேரத்தில் இலங்கைக்கு இந்தியா பெரியளவில் உதவி செய்து வருகிறது. அந்த வகையில் உதவி செய்த இடத்தில் தற்போது பெரும் சர்ச்சை உண்டாகியுள்ளது.
அதாவது, மன்னார் காற்றாலை திட்டத்தை அதானி குழுமத்திற்கு தர தனக்கு அழுத்தம் தரப்பட்டதாக இலங்கை மின்சார சபை தலைவர் பெர்டினாண்டோ புகார் கூறியிருந்தார். இவ்விவகாரம் குறித்து இலங்கை மின்சார வாரியத்தின் நாடாளுமன்றக் குழுவிடம் பெர்டினான்டோ கூறுகையில், அதானி நிறுவனத்துடன் கடந்தாண்டு 500 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இலங்கையின் வடகிழக்கு பகுதியில் இந்த மின்சார உற்பத்தி திட்டம் அமைய உள்ளது. இந்த ஒப்பந்தத்தை அதானியிடம் கொடுக்கும்படி அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம், இந்திய பிரதமர் மோடி தெரிவித்ததாக, என்னிடம் அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்தார்,என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இலங்கை மின்சார சபை தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ தனது பதவியை ராஜினாமா செய்தார். எம்.எம்.சி. பெர்டினாண்டோ ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாக மின்சாரத்துறை அமைச்சர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக இவ்விவகாரம் குறித்துப் பேசிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, குறிப்பட்ட ஒரு நபருக்கோ நிறுவனத்திற்கோ திட்டத்தை அளிக்க அனுமதி வழங்கியதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in